08/Dec/2020 04:32:02
புதுக்கோட்டை சண்முகா நகரிலுள்ள அருள்மிகு செல்வ விநாயகர் கோயிலில் கால பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அஷ்ட பைரவ ஹோமம் நடைபெற்றது . கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அஷ்டபைரவ ஹோமத்தை அர்ச்சகர் சந்தோஷ் அய்யர்,அருணாசலம் அய்யர் ஆகியோர் நடத்தினர்.
அதனை தொடர்ந்து, காலபைரவருக்கு பால் பழங்கள் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவின் தலைவர் எஸ். ராஜேந்திரன்(தாசில்தார்- ஓய்வு), ஆலய அர்ச்சகர் சந்தோஷ் அய்யர், அன்னபூர்ணா சங்கர், சண்முகாநகர் பக்தர்கள் செய்திருந்தனர்.