logo
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பெண் அரசு ஊழியர் பலி

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பெண் அரசு ஊழியர் பலி

08/Dec/2020 09:36:06

காஞ்சிபுரம் டிச: காஞ்சிபுரம் ஓரிக்கை வேளிங்கப்பட்டரை ஆசிரியர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சரண்யா (24). மாற்றுத்திறனாளியான இவர் களக்காட்டூரில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார்..

இம்மையத்தில் கழிப்பிட வசதி இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கழிவு நீர் தொட்டியின் மீது கால் வைக்கும்போது ஓடு உடைந்து சரண்யா தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளியான சரண்யா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Top