logo
 புதுக்கோட்டை  செஞ்சுரி  லயன்ஸ் சங்கம் சார்பில்  மரக்கன்றுகள் நடும் முகாம் தொடக்கம்

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் முகாம் தொடக்கம்

21/Sep/2020 07:28:04

புதுக்கோட்டை  செஞ்சுரி  லயன்ஸ் சங்கம், மரம் அறக்கட்டளை  சார்பில் பசுமை திட்ட முகாம் மூலம் புதுக்கோட்டைநகர் மற்றும்  கிராமப் பகுதிகளில் ஒரு லட்சம்மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

புதுக்கோட்டை  சார்லஸ் நகரில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைவர்  புவனேஸ்வரி தங்கமாளிகை   எஸ் . நடராஜன் தலைமை வகித்தார். மரம் அறக்கட்டளை  மரம் ராஜா, டாக்டர் முத்துராஜா  முன்னிலையில், சங்கச் செயலாளர் ஏ  அரவிந்த்   மரக்கன்றுகளை   விநியோகித்தார். இதையடுத்து  அப்பகுதி முழுவதும் 100 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டன. நிகழ்ச்சியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி  வரலாற்றுத்துறை பேராசிரியை நீலாவதி    செஞ்சுரி  லயன்ஸ் சங்கம் மற்றும் மரம் அறக்கட்டளை நிர்வாகிகள் தெட்சிணாமூர்த்தி, அன்புசண்முகம்,சத்தியமூர்த்தி குமரேசன்,கார்த்திக்,பிரசன்னா ராமன், சார்லஸ் நகர்பகுதி  பொதுமக்கள், மாணவர்கள்  ரித்தீஷ்,ரிஷி உள்பட பலர்  கலந்து கொண்டனர்.சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Top