logo
கஜா புயலில் விழுந்த மரங்கள் பொது ஏலம் விடப்படுமென அறிவிப்பு

கஜா புயலில் விழுந்த மரங்கள் பொது ஏலம் விடப்படுமென அறிவிப்பு

02/Dec/2020 01:44:32

புதுக்கோட்டை: கஜா புயலில் விழுந்த மரங்கள் பொது ஏலம் விடப்படுமென மாவட்ட அரசு மறுவாழ்வு இல்ல நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த இல்ல அலுவலர் மருத்துவர்.அக்சிலியா வெளியிட்ட   தகவல்:  புதுக்கோட்டை மாவட்ட அரசு மறுவாழ்வு இல்லத்தில் கஜா புயலினால் வேரோடு சாய்ந்த 101 பல வகை மரங்கள் மற்றும் முறிந்த 273 மரங்கள்  11.12.2020 அன்று காலை 12 மணியளவில் ஏலக்குழுவினரால் பொது ஏலமிட திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி வேப்பமரம் முற்றிலும் விழுந்த மரம் 48, கிளை முறிந்த மரம் 136, புளியமரம் முற்றிலும் விழுந்த மரம் 17, கிளை முறிந்த மரம் 33, கொன்னமரம் முற்றிலும் விழுந்த மரம் 4, கிளை முறிந்த மரம் 15, தைலமரம் முற்றிலும் விழுந்த மரம் 8, கிளை முறிந்த மரம் 3, புங்கமரம் முற்றிலும் விழுந்த மரம் 4, கிளை முறிந்த மரம் 8, வாதாமடக்கி முற்றிலும் விழுந்த மரம் 4, கிளை முறிந்த மரம் 3, நெல்லிமரம் முற்றிலும் விழுந்த மரம் 3.

 கிளை முறிந்த மரம் 7, அரசமரம் முற்றிலும் விழுந்த மரம் 3, கிளை முறிந்த மரம் 10, கொடுக்கபுள்ளிமரம் முற்றிலும் விழுந்த மரம் 2 , நொனமரம் முற்றிலும் விழுந்த மரம் 3, மா மரம் முற்றிலும் விழுந்த மரம் 1, கிளை முறிந்த மரம் 10, வேங்கைமரம் முற்றிலும் விழுந்த மரம் 1, கருவேலமரம் முற்றிலும் விழுந்த மரம் 1, கிளை முறிந்த மரம் 3, உதியமரம் முற்றிலும் விழுந்த மரம் 1, கிளை முறிந்த மரம் 10, கொய்யாமரம் முற்றிலும் விழுந்த மரம் 1, கிளை முறிந்த மரம் 1, வாகைமரம் கிளை முறிந்த மரம் 17, நாவல்மரம் கிளை முறிந்த மரம் 5, பிலாமரம் கிளை முறிந்த மரம் 3, ஆலமரம்; கிளை முறிந்த மரம் 3, அத்திமரம் கிளை முறிந்த மரம் 3, இச்சிமரம் கிளை முறிந்த மரம் 3 ஆகிய மரங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. மேற்படி பொது ஏலத்தில் விருப்பமுள்ள ஏலதாரர்கள் பங்கேற்கலாம்.


Top