25/Jun/2020 01:05:27
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுளவு வங்கிகளை கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட பொதுவான ஒரு அறிவிப்பை காரணம் காட்டி, மாநிலங்களில் உள்ள 1540 கூட்டுறவு வங்கிகளை (1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள்) ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மேலும் மாநில உரிமைகள் மற்றும் விவசாயிகளின் கடன்
பெறும் வசதிகளை பாதுகாக்க இந்த
அவசர சட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவசர சட்டம் பிறப்பிக்கும்
முயற்சியை நிறுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.