24/Nov/2020 09:59:57
சென்னை: நிவர் புயல் எதிரொலியால் போக்குவரத்தில் இடையூறு ஏற்படுவதையும் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், பெற்றோர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இன்று(நவ.24) நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மருத்துவ கலந்தாய்வு 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தொடர்பாக மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.tnmedicalselection.org / www.tnhealth.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.