23/Nov/2020 09:20:03
சென்னை: சென்னைக்கு தென் கிழக்கே 450 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்கி வருகிறது.
இந்நிலையில், நிவர் புயலை முன்னிட்டு 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு உள்ள பிற மாவட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப பேருந்து சேவை ரத்து செய்யப்படும் எனவு போக்குவரத்துக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.