logo
எலி பேஸ்ட் விற்பனை செய்த 50- க்கும் மேற்பட்ட மளிகை கடை உரிமையாளர்கள் மீது  வழக்குப் பதிவு: எஸ்.பி அதிரடி

எலி பேஸ்ட் விற்பனை செய்த 50- க்கும் மேற்பட்ட மளிகை கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு: எஸ்.பி அதிரடி

15/May/2020 12:55:57

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதி முறைகளுக்கு மாறாக எலி பேஸ்ட் விற்பனை செய்த 50-க்கும் மேற்பட்ட மளிகை கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட எலிபேஸ்ட்  பாக்கெட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

விவசாயிகளுக்கான மருந்து கடைகளில் மட்டுமே எலி பேஸ்ட் விற்பனை செய்ய வேண்டுமென விதிமுறைகள் உள்ள நிலையில் சாதாரண மளிகைக் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் எலி பேஸ்ட் விற்பனை செய்யப்படுவதால் அதனை எளிதாக வாங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமாரின் உத்தரவின்பேரில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விதிகளை மீறி எலி பேஸ்ட் விற்பனை செய்த 50-க்கும் மேற்பட்ட மளிகை கடைகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும்,கடைகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட எலி பேஸ்ட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Top