logo
 திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்: ஆந்லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்: ஆந்லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி

18/Nov/2020 07:21:26

திருவண்மாமலையில் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி,கோயிலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு  அனுமதி அளிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை (29ஆம் தேதி மகா தீப நாள் தவிர) ஒருநாளைக்கு சுமார் 5,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்திட கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் www.arunachaleswarrtemple.tnhrce.in என்ற கோயில் இணையதளத்தில் ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதில் கேட்கும் விவரங்களைக் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் நுழைவுச் சீட்டு பதிவு செய்பவர்களுக்கு கோயில் நிர்வாகம் நிபந்தனைகள் விதித்துள்ளது.

அதாவது 59 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் தொற்று உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 11 வயதிற்குள்பட்ட குழந்தைகள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கோயிலுக்குள் நுழையும்போது ஆதார் அட்டை நகல் அவசியம் கொண்டு வர வேண்டும். சிலைகளைத் தொட அனுமதியில்லை. மேலும் பக்தர்கள் வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்  நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Top