logo
மலேசியாவில் உயிரிழந்த புதுகை இளைஞர்: பெற்றோர் தவிப்பு

மலேசியாவில் உயிரிழந்த புதுகை இளைஞர்: பெற்றோர் தவிப்பு

05/May/2020 04:38:51

புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி அருகேயுள்ள வெள்ளாகுளத்தைச் சேர்ந்தவர் ஜான். இவரது மகன்

மைக்கேல் ரீகன் தாஜ் (25). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா

சென்று,அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில்,சில தினங்களுக்கு முன்பு அவர், கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது பெற்றோருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,மைக்கேல் ரீகன் தாஜ் உயிரிழந்துவிட்டதாக திங்கள்கிழமை மாலை அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள்   சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 மேலும்,மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மைக்கேல் ரீகன் தாஜ் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை தகவலை தெரிவிக்க வேண்டும்,அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Top