logo
கடை வாடகையை தள்ளுபடி செய்த கட்டட உரிமையாளர்.

கடை வாடகையை தள்ளுபடி செய்த கட்டட உரிமையாளர்.

03/May/2020 07:42:33

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தனது 10 கடைகளுக்கும் 2 மாத வாடகை தொகையை கட்டட உரிமையாளர் ஒருவர் தள்ளுபடி செய்துள்ளார்.


ஆலங்குடி அருகேயுள்ள மழவராயன்பட்டியைச் சேர்ந்தவர் அயுப்கான். இவர், வம்பன் 4 சாலை பகுதி வணிகர் சங்கத்தின் தலைவராக உள்ளார். அங்கு, இவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 10 கடைகள் மாதாந்திர வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவினால் வணிகர்கள் யாரும் கடைகளைத் திறக்கவில்லை. இங்கு தொழில் செய்து வரும் உணவகம்,  சலூன்,  தையல்,  எலக்ட்ரிகல் போன்ற சிறுவணிகர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு 2 மாதங்களுக்கான வாடகைத் தொகை ரூ.18,000 தள்ளுபடி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.  கட்டட உரிமையாளரின் இத்தகைய அறிவிப்பினால் வணிகர்கள் மனமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 இதே போல், அனைத்து கட்டட உரிமையாளர்களும் வாடகையை தள்ளுபடி செய்தால் பெரும் உதவியாக  இருக்கும் என அனைத்து பகுதி வணிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.


Top