logo
மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

06/Nov/2020 06:18:51

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளினை நடத்தப்பட்ட ஓவியப் போட்டியிள் வென்ற மாணவ மாணவியருக்கு இன்று  பரிசளிப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யமும், மய்யம் ஐடியும் இணைந்து நடத்திய விழாவிற்கு மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.சரவணன் தலைமை  வகித்தார். விவசாய அணி மாவட்ட செயலாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

முன்னாள் அரசு மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர். ஆர்.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

வழக்கறிஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் பொன்.கஜேந்திரன், மய்யம் ஐடி மாநில துணைச் செயலாளர் கே.செந்தில்குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஓவியப்போட்டிக்கான நடுவர்களாக சித்ரகலா அகாதெமியின் நிறுவனர் ஓவியர் கே.ரவி, ஓவிய ஆசிரியர்கள் பொன்.தனபாலன், தனபால் ஆகியோர் பங்கேற்று பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்தனர்.

நகரச் செயலாளர் எம்.ராஜகோபால் வரவேற்றார். மய்யம் ஐடி மாவட்ட செயலாளர் ஏ.ஹக்கீம் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாவட்ட செயலாளர் ஜெய் பார்த்தீபன், புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுந்தர் மெஸ் சுந்தர், பரணிதரன், பொறியாளர் முருகவேல், பவித்ரா, சாதிக், நவீன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Top