logo
வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

05/Nov/2020 11:58:07

ஈரோடு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று(5.11.2020) காளைமாடு சிலை அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

 ஆர்ப்பாட்டத்திற்கு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு செயற்குழு உறுப்பினர் முனுசாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துளசி மணி, ஏஐடியூசி சின்னசாமி காளிமுத்து உட்பட பல்வேறு அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


Top