04/Nov/2020 08:42:22
திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 6-ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ர் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க இருப்பதாகவும் , அதன் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த வளர்ச்சித் திட்ட பணிகளை திறந்து வைத்தும் , புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதாகவும் , பின்னர் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டமும். பின்னர் விவசாயிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளோடு ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.