logo
30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்

30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்

04/Nov/2020 06:48:21

ஈரோடு: தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் ஈரோட்டில் சிஐடியு  அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் ஊழியர்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க அரசு முன்வர வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கு மூட உத்தரவிட வேண்டும்.

 ஊழியர்கள் மீதான விரோத போக்கினை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 6-ஆம் தேதி ஈரோட்டில் வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே  அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், எல்பிஎப் கோபால், முருகேஷ், சிஐடியு பாண்டியன் பொன்.பாரதி, டிஎன்எஸ்சிஎஸ்டி குப்புசாமி மற்றும் கூட்டுக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Top