logo
மனுஸ்மிருதி நூலை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் பேரவையினர் 12 பேர் கைது

மனுஸ்மிருதி நூலை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் பேரவையினர் 12 பேர் கைது

04/Nov/2020 06:12:38

ஈரோடு வீரப்பன் சத்திரம்  பகுதியில் திராவிடர் பேரவையினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் பேரவை தலைவி மாசிலாமணி தலைமை வகித்தார். இதில், பெண்களை  இழிவாக சித்தரிக்கும் மனுஸ்மிருதி நூலை தடை செய்ய வேண்டும். கொரோனா பரவும் சூழலில் பாரதிய ஜனதாகட்சியினர் மேற்கொள்ளும் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும்.

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார் அனுமதி மறுத்திருந்ததால், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாசிலாமணி மற்றும் 4 பெண்கள் உள்பட  12பேரை போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Top