logo
மனுஸ்மிருதியை தடை செய்யக்கோரி துண்டறிக்கை  வழங்கி திருமாவளவன் பிரசாரம்

மனுஸ்மிருதியை தடை செய்யக்கோரி துண்டறிக்கை வழங்கி திருமாவளவன் பிரசாரம்

04/Nov/2020 04:58:47

சென்னை: இந்து பெண்களை இழிவுபடுத்திவிட்டதாக திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தனது கருத்துக்கு பின்னணியில் திமுக இருப்பதாக கூறுவது மோசடி அரசியல் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மனு ஸ்மிருதி என்னும் நூலில் இந்து பெண்கள் குறித்து கூறியிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால், ஆவடியை சேர்ந்த முன்னாள் ஸ்தாபன காங்கிரஸ் பிரமுகரும், சைவதமிழ் பேரவை என்ற அமைப்பின் நிர்வாகியுமான கலையரசி நடராஜன் என்பவர் திருமாவளவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மனு ஸ்மிருதியை தடை செய்யக்கோரி துண்டறிக்கை  விநியோகிக்கும் நிகழ்வை கலையரசி நடராஜன் நடத்திவரும் சிறிய அளவிலான சிவன் கோவிலில் வைத்து தொடங்க திட்டமிட்டிருந்த திருமாவளவன், தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றார்.

அங்கிருந்த சிவலிங்கத்தின் பின்பக்கம் மண்டியிட்ட  நிலையில் அமர்ந்து லிங்கத்தை தொட்டுப்பார்த்த திருமாவளவன், சிவலிங்கத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் அங்கிருந்த மகளிரணியினரிடம் துண்டறிக்கை கொடுத்து மனுஸ்மிருதிக்கு எதிரான தனது பிரசாரத்தை திருமாவளவன் தொடங்கி வைத்தார்

 

Top