logo
நீர்பிடிப்பு பகுதியில் பரவலான மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் பரவலான மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

03/Nov/2020 06:05:25

ஈரோடு: ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் ,விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து வந்தது.

மேலும் அணைக்கு வரும் நீர்வரத்தை  காட்டிலும் பாசனத்திற்காக திறந்து விடும் தண்ணீர் அதிக அளவில் இருந்ததால் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று  பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று  காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 96.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 266 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300   கன அடி என மொத்தம் 3200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Top