logo

புளியம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

02/Nov/2020 08:38:10

ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி தொட்டிபாளையம் பகுதியில் சிலர் பணம் சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

 இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு சீட்டு  விளையாடி வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், சத்தி தொட்டிபாளையத்தை சேர்ந்த சேர்ந்த திருமூர்த்தி(47), அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்(43), சுந்தர்ராஜன்(40), முருகேசன்(37), தங்கராஜ்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் புளியம்பட்டி போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,500 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.


Top