01/Nov/2020 10:33:54
சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமான வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணுவின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (1.11.2020) மார்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, உணவுத் துறை அமைச்சர் இரா. காமராஜ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய் பேரிடர் மேலாண்மை பற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உள்ளனர்