logo
பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் பூங்கா, ஓவியங்கள் திறப்பு

பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் பூங்கா, ஓவியங்கள் திறப்பு

01/Nov/2020 08:53:59

பொன்னமராவதி:புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி  அருகே வேகுப்பட்டியில் ரூ.3 லட்சம்  நிதியில் வேகுப்பட்டி ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட நடைபாதை பூங்கா  சுற்று வேலிகள்,50 -க்கும் மேற்பட்ட உயிரோட்டமான சுவர் ஓவியங்களை தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே..வைரமுத்து திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன், பொன்னமராவதி தாசில்தார் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், காவல்துறை உதவி ஆய்வாளர் மாயழகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, இணைச்செயலாளர் மோகனாசேகர், ஊராட்சி மன்ற தலைவர்  அர்ஜுனன்,துணைத்தலைவர் முத்து,வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கலைநயத்துடன் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளையை பொதுமக்கள்சிறுவர் சிறுமியர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். மேலும், சிறுவர் சிறுமியரின் சிலம்ப நிகழ்ச்சியை தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் தொடங்கி வைத்தார். வேகுப்பட்டி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

Top