logo
கறம்பக்குடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கறம்பக்குடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

24/Aug/2022 08:01:26

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 10-ஆம் வகுப்பு துணைத்தேர்விலும் தேர்ச்சிபெறாததால் புதன்கிழமை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 கந்தர்வகோட்டை அருகேயுள்ள அண்டனூரைச் சேர்ந்த சேகர், ரேனுகா ஆகியோரின் மகள் ஜெனிதா(15). சேகர் உயிரிழந்துவிட்ட நிலையில், கறம்பக்குடி அருகேயுள்ள தீர்த்தான்விடுதி உள்ள அவரது பெரியம்மாள் சீரங்கம் என்பவரது வீட்டில் தங்கி கறம்பக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று தேர்வெழுதியுள்ளார். அதில், 2 பாடங்களில் ஜெனிதா தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், மீண்டும் துணைத்தேர்வு எழுதியுள்ளார். அதற்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.அதிலும் ஒரு பாடத்தில் ஜெனிதா தேர்ச்சி பெறவில்லை. இதனால், மனமுடைந்த ஜெனிதா புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  தகவலறிந்து சென்ற கறம்பக்குடி போலீஸார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Top