27/Jul/2021 12:23:50
ஈரோடு, ஜூலை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் துளசிமணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மேற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கர்நாடக அரசு காவிரி ஆற்றில் மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான மார்க்கேண்டேயன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள யார்கோல் அணையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிசாமி, சி.பி.ஐ .தெற்கு மாவட்ட பொருளாளர் பிரபாகரன் உட்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.