11/Jul/2021 01:06:38
புதுக்கோட்டை, ஜூலை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் சார்பில் இலுப்பூர் கல்வி மாவட்டம் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவக் கருவிகள் மற்றும் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜீவன்ராஜ் வரவேற்றார்.
விழாவில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை கலந்துகொண்டு சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்களை கீரனூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் இராமு, காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவசுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் வின்சன்ட், பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன், கல்வி மாவட்டத் தலைவர் ஜான்மரியஜோசப், சங்கத்தின் செயலாளர் புவியரசு மற்றும் நிர்வாகிகள் சோமசுந்தரம், நடனம், இராஜா, கீதா, அழகு, வடிவேல், செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்டப் பொருளாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார்.