29/Jun/2021 11:15:45
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீடு உள்ளதாக அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
விராலிமலை தொகுதியிலுள்ள பல்வேறு பிரச்னைகள், கோரிக்கைகள்
தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவை நேரில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம்
மேலும் கூறியதாவது: பலஇடங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் விவசாயிகள் காத்திருக்கும்
சூழ்நிலை இருக்கிறது. உடனடியாக அரசு தலையிட்டு நெல்கொள்முதல் நிலையங்களை முமுமையாக செயல்பட வைக்க
வேண்டும்.
நெல் கொள்முதல் செய்வதில் பல இடங்களில் அரசியல் தலையீடுதான் இதற்கு காரணம். எனவே இதை அரசியலாகப் பார்க்காமல் கட்சி பேதம் இல்லாமல் விவசாயிகளின் பிரச்னையாகப் பார்த்து விவசாயிகள் பயனடையும் வகையி்ல் நெல் மூட்டைகள் தேங்காத வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் அரசியல் தலையீடும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன் என்றார் எம்எல்ஏ- விஜயபாஸ்கர்.