28/Jun/2021 02:55:29
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன்திங்கள்கிழமை திரும்பிச்சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து
8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு
கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதலில் கொரோனா தடுப்பூசி மாவட்டம்
முழுவதும் 66 மையங்களில் போடப்பட்டு வந்தது. ஈரோடு
மாநகர் பகுதியில் 10 இடங்களிலும், புறநகர் பகுதிகளில்
56 இடங்களிலும் என மொத்தம் 66 இடங்களில் தடுப்பூசி
போடப்பட்டு வந்தது.
இந்நிலையில் தடுப்பூசி போடும் மையங்களில் நள்ளிரவிலேயயே மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு
வந்தது. எனினும் சில மையங்களில் போலீஸ்
பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் கூடுவதை தவிர்க்கும்
வகையிலும், அவர்கள் சிரமமின்றி தடுப்பூசி போடும்
வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி
முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கி போடப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதைப்போல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் மையம் அதிகரிக்கப்பட்டு தினமும் 110 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால்ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி இரண்டாவதுநாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று தடுப்பூசி எப்படியாவது போடுவார்கள் என்ற நம்பிக்கையில் வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுபற்றிய அறிவிப்பு ஒவ்வொரு மையங்கள் முன்பும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை தடுப்பூசிகள் வருவதைப் பொறுத்து வழக்கம்போல் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.