logo
 ஈரோட்டில் 28-ஆம் தேதி முதல்  ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: தேனீர்- சலூன் கடைகள் செயல்பட அனுமதி

ஈரோட்டில் 28-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: தேனீர்- சலூன் கடைகள் செயல்பட அனுமதி

26/Jun/2021 07:14:43

ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் 28-ஆம் தேதி முதல் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்  தேனீர்சலூன் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அவை பல்வேறு கட்டங்களாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. எனினும் ஈரோடு,சேலம், கோவை உள்பட 11 மாவட்டங்களில் பாதிப்பு மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமாக இருந்து வருகிறது.

இதனால் ஊரடங்கு நீட்டிக்கும் போது பாதிப்புள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 28-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இதையடுத்து பல்வேறு தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு வரும் 28-ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தேனீர் கடைகளில்  காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை பார்சலில்  மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மென்பொருட்கள் , பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையும், ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையும், கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையும், காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையும்.

அழகு நிலையங்கள், சலூன் கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர் களுடன்  மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை  இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 இனிப்பு கார வகை கடைகள் பார்சலில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முக்கிய சில தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஆனால்  டாஸ்மாக் கடைகள் திறக்க  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 இதேப் போல் பொது போக்குவரத்துக்கும் தடை நீடிக்கிறதுநமது மாவட்டத்தில்  இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல மீண்டும் -பாஸ்  முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பிற மாவட்டத்தை  சேர்ந்தவர்கள் நமது மாவட்டத்திற்கு  வருவதற்கும் - பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

                                                   

Top