logo
குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கோவிட் நிவாரண நிதி : ஆட்சியர் கவிதாராமு தகவல்

குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கோவிட் நிவாரண நிதி : ஆட்சியர் கவிதாராமு தகவல்

24/Jun/2021 10:13:12

புதுக்கோட்டை, ஜூன்: குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினர்களுக்கும் தமிழக அரசின் கோவிட் நிவாரண நிதி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில்  மூன்றாம் பாலினத்தவர்கள் அடையாள அட்டை பெற்று, அதேசமயம் குடும்ப அட்டை பெறாதவர்களுக்கும் தமிழக அரசின்  கோவிட் நிவாரண நிதி உதவித்தொகை ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. மேலும் இதுவரை அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவகளிடமிருந்து அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பிக்கலாம்.

அடையாள அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் (Passport size photo -3), பள்ளி மாற்றுச்சான்றிதழ்  (TC)ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக த்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 30.6.2021 அன்று மாலை 5 மணிக்குள் வழங்கிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை  04322-222270 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Top