18/Jun/2021 03:51:26
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கொரோனா தொற்று பரவல் விகிதம் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வந்தது. மாநகராட்சி சார்பில் தினமும் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனையும், தனியார் மருத்துவமனைகளில் தினமும் ஆயிரம் பரிசோதனை என மொத்தம் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதைப்போல் மாநகராட்சி பகுதியில் உள்ள
1.30 லட்சம் வீடுகளில் வாசிக்கும் மக்களுக்கு காய்ச்சல்
சளி இரும்பல் போன்ற அறிகுறி இருக்கிறதா
என்று கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில்
1200 தன்னார்வலர்களும், 200 மாநகராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு
தினமும் வீடுவீடாக சென்று சளி காய்ச்சல் குறித்து கணக்கெடுத்து
வருகின்றனர். இதில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளிலேயே சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஒரே தெருவில் மூன்று
வீடுகளுக்கு மேல் பாதிப்பு இருந்தால் அந்தத்
தெரு தனிமைப்படுத்தப்பட்டு
தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதலில் மாநகர்
பகுதியில் 45 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது மாநகராட்சிப் பகுதியில் தொற்று குறைய தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 170 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் 600 என்ற இருந்த தொற்று தற்போது வேகமாக சரியத்தொடங்கியுள்ளது. இதைப்போல் 45 ஆக இருந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதி தற்போது 10 - ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.