17/Jun/2021 06:54:10
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டம், அனுமன்பள்ளியில் தூய்மை பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குனர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்களை காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகேயுள்ள அட்டவணை அனுமன்பள்ளி மற்றும்
முகாசி அனுமன்பள்ளி ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி
இயக்குனர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்
செந்தில் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்குத் தொகுதி
எம்எல்ஏ திருமகன் ஈவெரா கலந்து கொண்டு அத்தியாவசிய தேவையான மளிகை
பொருட்கள், காய்கறிகள் மற்றும் மதியஉணவு பிரியாணி
ஆகியவற்றை வழங்கினார்.
இதனை தொடர்ந்து அரச்சலூர் ஆரம்ப
சுகாதார நிலைய மருத்துவர்கள், ஊராட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் சத்து மாத்திரைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அ.அனுமன்பள்ளி ஊராட்சி
மன்ற தலைவர் தனபாக்கியம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மு.அனுமன்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.