logo
புதுக்கோட்டை  தொகுதி அலுவலத்தில்  மக்கள் பணியைத் தொடங்கிய எம்எல்ஏ

புதுக்கோட்டை தொகுதி அலுவலத்தில் மக்கள் பணியைத் தொடங்கிய எம்எல்ஏ

13/Jun/2021 10:43:28

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில்  மக்கள் பணியை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்  அருகேயுள்ள சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை  சட்டத்துறை அமைச்சர் எஸ்..ரகுபதி ,  சுற்றுச்சூழல் அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன்  ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.

 அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் உருவப்படத் துக்கு மலர் தூவி வணங்கினர். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தனது பணியை தொடங்கினார். நிகழ்வில் , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.


Top