logo
திருவரங்குளத்தில் சிபிஎம் சார்பில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகம்

திருவரங்குளத்தில் சிபிஎம் சார்பில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகம்

11/Jun/2021 07:58:48

புதுக்கோட்டை, ஜூன்:  புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொது மக்களுக்கு கப சூர குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

மிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவும் கொரோனா நோயைக்கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதைப் போல அனைத்து அரசியவல் கட்சிகள், சேவை சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் நற்பணி மன்றத்தினர், அரசு அலுவலர் சங்கங்கள், உள்ளாட்சி நிர்வாகிகளும் தங்களால் முடிந்த பல்வேறு மனித நேய உதவிகளை கடந்த 18 நாள்களாக செய்து வருகின்றனர்.இதில், நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய கபசூர குடிநீர், நிலவேம்புக்குடிநீர் ஆகிய சித்த மருந்துகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக திருவரங்குளம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில் மாதர் சங்க மாவட்ட பொருளாளர் பாண்டிச்செல்வி முன்னிலையில் பொதுமக்களுக்கு கப சூர குடிநீர் மற்றும் முகக் கவசம்  வழங்கப்பட்டது. கிளைச்ச் செயலாளர்கள் ராஜா கண்ணு பழனிவேல் ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

 

                                                   

Top