09/Jun/2021 07:35:08
புதுக்கோட்டை
மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை
முன்களப்பணியாளர்களாக அறிவிக்கக்கோரி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி அலுவலகம்
அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச்செயலர் த.செங்கோடன் தலைமையில்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக
அறிவித்து, ஊக்கத்தொகை வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள்
வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியத் துணைச்
செயலர் செல்வராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.