logo
சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

09/Mar/2021 06:28:04

புதுக்கோட்டை, மார்ச்: சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

இது குறித்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி.உமாமகேஸ்வரி  வெளியிட்ட தகவல்:

ஏப்ரல் 2021-இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் அனைத்து நாட்களிலும் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது அடையாள அட்டை வாக்காளர் அடையாள அட்டை மற்றும் படைப்பணிச் சான்றுடன் தங்களது விருப்பத்தினை (படிவத்தில் பூர்த்தி  செய்து) நேரில் வருகை தந்து பதிவு செய்து கொள்ளலாம்.

Top