logo
சத்துணவுத்திட்டத்தில் பணி வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி நாளில் 14 யூனியன்களிலும் குவிந்த பட்டதாரிகள் பெண்கள்

சத்துணவுத்திட்டத்தில் பணி வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி நாளில் 14 யூனியன்களிலும் குவிந்த பட்டதாரிகள் பெண்கள்

30/Sep/2020 11:16:38

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் நிலையில் 93 காலி பணியிடங்களுக்கும், சமையலர் நிலையில் 11 காலி பணியிடங்களுக்கும், சமையல் உதவியாளர் நிலையில் 97 காலி பணியிடங்களுக்கும் என மொத்தம் 201 காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 24ம் தேதி முதல் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. விருப்பமுடையவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 14 யூனியன் அலுவலகம், நான்கு நகராட்சி அலுவலகங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு  தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர். இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு தேர்ச்சி இருந்தாலே போதும். ஆனால் பட்டதாரி பெண்களும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. இதில், மாவட்டத்தில் நேற்று வரை 2,900பேர் விண்ணப்பித்துள்ளனர்.  புதன்கிழமை கடைசி நாள் என்பதால் மாநகராட்சி நகராட்சி யூனியன் அலுவலர்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

Top