logo
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட  கந்தர்வகோட்டை பகுதி மக்களுக்கு  உணவுப் பொருள்களை வழங்கிய ஆசிரியர்கள்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை பகுதி மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கிய ஆசிரியர்கள்

06/Jun/2021 10:49:08

புதுக்கோட்டை, ஜூன்:  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்து.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா தொடங்கி வைத்தார். இதுவரை ஒரு லட்ச ரூபாய்க்கும்  மேலாக செலவழித்து   உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்த நிகழ்வில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் மா.குமரேசன்மாநில தணிக்கையாளர் ரெங்கராஜ், மாவட்ட செயலாளர் குரு.மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் மதலைமுத்து, செல்வகுமார். வாசுகி, வியாஸ், வடிவேலு, முத்துசாமி. இயலரசன் மற்றும் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top