05/Jun/2021 06:30:26
சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர்
நா. புவியரசன் வெளியிட்ட தகவல்:
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி
(3.1 முதல் 4.6 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல கழற்சி
காரணமாகவும், கோவா -கர்நாடகா கடலோர பகுதி முதல் தென் தமிழ்நாடு வரை (1 கிலோமீட்டர் உயரத்தில்)
நிலவும் வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக...
6. 6..2021: தமிழ் நாட்டின் ஒரு சில உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
7.6.2021: மேற்கு
தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர
மாவட்டங்கள் மற்றும் புதுவை. காரைக்கால் பகுதிகளில்
இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையேநிலவும்.
8.6.2021 மற்றும்
9.6.2021; தமிழ்நாட்டின் தென்
கடலோர மாவட்டங்கள், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது
முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும்
புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செலிசியஸை ஒட்டி இருக்கும்
திருப்புவனம் (சிவகங்கை) 2, காரையூர் (புதுக்கோட்டை),
எட்டயபுரம் (தூத்துக்குடி), பேரையூர் (மதுரை) தலா 7, தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை, புள்ளம்பாடி( திருச்சிராப்பள்ளி) தலா 6, பெரம்பலூர், ஹரூர் (தர்மபுரி) தலா 5. கொடைக்கானல் ,அரவக்குறிச்சி
(கரூர் ) பெரியாறு (தேனி), தளி தலா 4.
4.6.2021 மற்றும்
5.6.2021: கேரளா கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில்
குறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர்
வேகத்தில் வீசக்கூடும்.
4.6.2021 மற்றும் 5.6.2021: கேரளா கடலோர பகுதிகள், லட்சத்தீவு
பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீயிட்டர்
வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பு: தென்மேற்கு பருவமழை சனிக்கிழமை
(ஜூன்.5) தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின்
அனைத்து மாவட்டங்களிலும்
முன்னேற வாய்ப்புள்ளது.