logo
நாம்தமிழர் கட்சி சார்பில் முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியத்துக்கு ரூ. 5 லட்சம் அளிப்பு

நாம்தமிழர் கட்சி சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியத்துக்கு ரூ. 5 லட்சம் அளிப்பு

04/Jun/2021 01:28:30

சென்னை, ஜூன்: நாம்தமிழர் கட்சி சார்பில் முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

சென்னை தலைமைச்செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர்  மு..ஸ்டாலினிடம் வழங்கினார். இதையடுத்து  இயக்குநர் பாரதிராஜாவும் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியத்துக்கு வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம்  சீமான்  கூறியதாவது:    7 பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேசி உள்ளோம். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை பொருத்து முடிவு எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்

தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி அனைத்திலும் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார். அனைத்துத் துறைகளும் வேகமாக இயங்குகின்றன. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றுகின்றனர் என்றார் சீமான்.  தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று பாரதிராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.   

Top