logo
ஈரோட்டில் காவல்துறையினருக்கு   நலத்தித்திட்ட உதவிகள்: அமைச்சர் முத்துசாமி வழங்கல்

ஈரோட்டில் காவல்துறையினருக்கு நலத்தித்திட்ட உதவிகள்: அமைச்சர் முத்துசாமி வழங்கல்

02/Jun/2021 01:07:37

ஈரோடு, ஜூன்:  ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு  நலத்திட்ட உதவிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு ஆணைக்கல் பாளையத்திலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட த்தில் பணிபுரியும்  போலீஸார் அனைவருக்கும்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட எஸ்பி  தங்கதுரை தலைமையில் நடைபெற்றது.  இதில்,  தமிழக வீட்டுவச தித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு போலீஸாருக்கு அரிசி மற்றும் முக கவசங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 



பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது, பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் முன்கள பணியாளர் களுக்கென தனியாக 10 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு ள்ளது. இதுவரை 289 போலீஸார்  கொரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளதால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.

கொரோனா தடுப்பூசி குறைந்த அளவே வந்துள்ளது. எனவே மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.


அரசு மருத்துவமையில் கொரோனா நோயாளிகள் உட்பட அனைவரும் ஒரே வழியை பயன்படுத்துவதால் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோயாளிக்கென தனி வழிகள் மற்றும் தனிவார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார் அமைச்சர் முத்துசாமி.

Top