logo
புதுகை தாரகை நிறுவனங்களின் சார்பில் 30 ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பு வழங்கல்

புதுகை தாரகை நிறுவனங்களின் சார்பில் 30 ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பு வழங்கல்

01/Jun/2021 04:27:56

புதுக்கோட்டை, ஜூன்:  புதுகை தாரகை நிறுவனங்களின் சார்பில் 30 ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில்  கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிக அளவில் பரவி வருவதாலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு உதவும் நோக்கில்   புதுக்கோட்டை தாரகை ஜவுளி நிறுவனங்களின் சார்பில் தாரகை நிறுவனங்களின் உரிமையாளர் இக்பால் தலைமையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  30 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை தொகுப்பை வழங்கினார்.

இதில், கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அப்துல் ஜப்பார்மாவட்ட வர்த்தக கழக தலைவர் சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் செய்யது நசீர், செயற்குழு உறுப்பினர் இப்ராகிம் பாபு, கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top