31/May/2021 09:51:39
புதுக்கோட்டை, மே: முழு முடக்கத்தையொட்டி புதுக்கோட்டை நகராட்சிப்பகுதியில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படுவதை புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை.முத்துராஜா ஆய்வு செய்தார்.
கொரோனா முழுமுடக்கத்தால் உணவகங்கள், பால், மருந்து, பெட்ரோல்
விற்பனை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில்
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் வசிக்கும்
மக்களுக்கு காய்கறி, மளிகைப் பொருள்கள் வீட்டுக்கே கிடைக்கு வகையில் காய்கறி விற்பனைக்காக 52 வாகனங்களு்ம், பழங்களின் விற்பனைக்கு 17 வாகனங்களும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதியளிக்கப்பட்டது.
மேலும், மளிகைப் பொருள்களை வீட்டிற்கே வந்து
சேரும் வகையில் புதுகை நகரில் உள்ள பல கடைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு
அவற்றின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் காய்கறி விற்பனை செய்யும்
வாகனத்தை புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை.
முத்துராஜா ஆய்வு செய்தார். விற்பனையாளர்கள் தரமான காய்கறிகளை, முறையான
விலை வைத்து விற்பனை செய்கிறார்களா என்பதை
வியாபாரியிடமும் பொதுமக்களிடமும்
விசாரித்தார்.
பொருள்களின் தரமும் நியாயமான விலையும் இருந்ததால் வியாபாரிகளிடம் திருப்தி தெரிவித்தார். இந்த ஆய்வில், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உடனிருந்தார்.