29/May/2021 10:22:48
ஈரோடு, மே : ஈரோட்டில் தூய்மைப்பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை சனிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை(மே30) ஆய்வு செய்ய உள்ளார். அதற்காக சனிக்கிழமை இரவு ஈரோடு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் ஈரோடு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் முழுவதும் முன்களப்பணியாளர் களாக பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சி போன்ற பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 10,000 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருள்ளை விநியோகிக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.