logo
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி சிக்கியதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி சிக்கியதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

28/May/2021 11:08:41

ஈரோடு, மே ஈரோடு  மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில்  9-ஆவது கொண்டை ஊசி வளைவில் கண்டெய்னர்  லாரி நிலை தடுமாறி  மலைப்பாதையின் பக்கவாட்டுச் சுவரில் மோதி நின்றது  பக்கவாட்டுச் சுவர் தடுக்க வில்லையெனில் மலையின் பள்ளத்தாக்கில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டு இருக்கும்.அதிருஷ்டவசமாக   லாரி நிலைதடுமாறி நின்றுவிட்டது.

 இதனால் சுமார்மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு இருபுறங்களிலும் காய்கறி மற்றும் சரக்குகளை ஏற்றி வந்த வாகனங்கள் வரிசையில் நின்றன இதனிடையே குறுநாவலில் உயிரிழந்தவரின் சடலம் ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அனைவரும் சேர்ந்து லாரியின் பக்கவாட்டில் இருந்த சிறிய இடைவெளியில் தள்ளி வழியனுப்பி வைத்தனர்.

Top