27/May/2021 12:39:36
ஈரோடு, மே: ஈரோட்டில் அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி நடமாடும் வாகனங்கள் குறித்த கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் வெளியிட்ட தகவல்: தமிழக முதல்வர் உத்தரவின்படி, கொரோனா தொற்று நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் நடமடாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன.
இது தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை அறிந்து தீர்வு காணும் நோக்கில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் 0424-2339102 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கோரிக்கையின் தன்மைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தீர்வு காணப்படும்.