25/May/2021 08:47:47
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் 10-க்கு மேற்பட்ட வாகனங்கள் மூலம் லைசால் கிருமிநாசினி தெளிக்கும் பணியைபுதுகை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர்
வை. முத்துராஜா கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில்
ஒரே நாளில் 355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாள்களில் ஏற்பட்ட
பாதிப்பை விட குறைந்துள்ளது
மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது. தினசரி 2000 திற்கும் மேல் RTPCR மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. . புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், முத்து மீனாட்சி பல்நோக்கு மருத்துவ மனையிலும் RT-PCR பரிசோதனை மையங்கள் அமைந்துள்ளன.
மாவட்டத்தில் மொத்தம் 3028 படுக்கை வசதிகள்
தயார் நிலையில் உள்ளது. அதில் 870 நபர்கள்
சிகிச்சையில் உள்ளனர், 2158 படுக்கைகள் காலியாக உள்ளது.
ஆக்சிஜன் படுக்கைகள் - 968. சாதாரண படுக்கைகள் - 1936. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 124-ம் உள்ளன. இதுவரை 79 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றார்.