logo

ஈரோடு மாவட்டத்தில் இயக்கப்பட்ட அரசு, தனியார் பேருந்துகளில் குறைந்தளவே மக்கள் பயணித்தனர்

23/May/2021 10:31:42

ஈரோடு, மே : ஈரோடு மாவட்டத்தில் இயக்கப்பட்ட அரசு, தனியார் பேருந்துகளில் எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவே மக்கள் பயணித்தனா்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு திங்கள்கிழமை முதல்  7 நாள்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூரை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள்  இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு 233 பேருந்துகளும், மாவட்டத்திற்குள் 66 பேருந்துகள் என மொத்தம் 299 அரசு  பேருந்துகள் இயக்கப்பட்டன

அதேபோல், குறைந்தளவில் தனியார் பஸ்களும், மினி பஸ்களும் இயக்கப்பட்டது. இதையொட்டி, ஈரோடு பேருந்துகள்  பேருந்து நிலையத்தில்  இருந்து  கோவை, திருப்பூர், சேலம், கரூர் போன்ற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் மக்கள் அதிகளவில் பயணித்தனர். அதேபோல், மாவட்டத்திற்குள் இயக்கப்பட்ட பஸ்களில் குறைந்தளவே மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Top