logo
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவிப்பு.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவிப்பு.

23/May/2021 05:49:38

திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1346-வது சதய விழாவையொட்டி அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அவரது 1346-வது சதயவிழாவையொட்டி தமிழக அரசின் சார்பில் திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவச்சிலைக்கு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆட்சியர் க.சிவராசு, முசிறி சட்டப்பேரவை உறுப்பினர் தியாகராஜன், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top