23/May/2021 12:16:05
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டையில் வீர முத்தரையர் சங்கம்,தேசிய பாட்டாளி கட்சி சார்பில் நடைபெற்ற பெரும்பிடுகு முத்தரையர் 1346-ஆவது சத்ய விழாவில் சட்ட அமைச்சர் ரகுபதி, எம்எல்ஏ- முத்துராஜா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புதுக்கோட்டை வீர முத்தரையர் சங்கம்,தேசிய பாட்டாளி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேரரசர்
பெரும்பிடுகு முத்தரையர்
1346-ஆவது சத்ய விழாவுக்கு வீர முத்தரையர் சங்க நிறுவனத்தலைவர்,தேசிய பாட்டாளி கட்சியின்
நிறுவனத்தலைவர் சி.கருப்பையா முத்தரையர் தலைமை வகித்தார்.
கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சமூக இடைவெளி பின்பற்ற நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு அலுவலக வளாகத் தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.
மேலும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, நகர செயலாளர் க.நைனாமுகமது, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு, மற்றும் வீர முத்தரையர் சங்கம்,தேசிய பாட்டாளி கட்சி நிர்வாகிகள் திருப்பூர் பெருமாள், துவரங்குறிச்சி ராஜூ, புதுக்கோட்டை கைலாசம், ராஜகோபாலபுரம் நாராயணசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.