logo
ஈரோட்டில் புதிய உச்சமாக 1568 பேருக்கு கொரோனா தொற்று மொத்த பலி 201 ஆக உயர்வு

ஈரோட்டில் புதிய உச்சமாக 1568 பேருக்கு கொரோனா தொற்று மொத்த பலி 201 ஆக உயர்வு

19/May/2021 01:40:22

ஈரோடு, மே: ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று 1568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35,760 ஆக உயர்ந்துள்ளது.

நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 669 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதையடுத்து இதுவரை 27,907 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 7,652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் பெண் உள்பட 3 பேர் பலியானதையடுத்து மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கையானது 201 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படுக்கை காலி விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி அரசு  மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் 24, ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள் 105, ஐசியூ 3 என மொத்தம் 132 படுக்கைகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் கேர் சென்டர்களில் 2,108 படுக்கைகள் காலியாக உள்ளது.

Top