19/May/2021 12:14:14
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை பெரியார் நகரில் 40-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 2000 -க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் நேற்று மட்டும் ஒரே நாளில் 407 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகளைக்கொண்ட
புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் உள்ள 50 -க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்த 40-பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரே வீதியில் மட்டும் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக பெரியார் நகரில்
பல தெருக்கள் கட்டுப்படுத்த பகுதிகளாக மாற்றப்பட்டு தற்காலிக தடுப்புகள் அமைத்து
அடைக்கப்பட்டுள்ளன.உள்ளிருந்து
யாரும் வெளியே செல்ல முடியாது வெளியில்
இருந்து யாரும் உள்ளே செல்ல முடியாதபடி அடைக்கப்பட்டு நோய்த்தொற்று உள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட
பகுதி என அறிவிப்பு பேனர்கள் ஒட்டப்பட்டன.
நகராட்சி ஊழியர்கள் பெரியார் நகர் பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் தூவி கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.